Wednesday, November 5, 2008

பிடிக்கும்.. உன்னை மட்டும் !


பல மணி நேர பேச்சிற்கிடையே
உன் சில நொடி மௌனம்..

ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
என் கைப்பிடித்து
உன் கண்கள் சொல்லும் பாஷை..

சுற்றி ஏதேதோ நடக்க
என் உலகத்தில் நீயும் நானும் மட்டும்..

ம்ம்ம்ம்..
வாழ்க்கையின் நெடுந்தூர பயணத்தில்,
உன்னோடு நடந்து வந்த பாதையில் மட்டும்,
பசுமைக்கு பஞ்சம் இல்லை...