Wednesday, November 5, 2008

சொல்லாத உதடுகள் !


உதட்டுக்கு தெரியவில்லை
உள்ளத்தின் தவிப்பு..
தெரிந்திருந்தால் ,
உரைத்திருக்கும் அத்தனையும்
உரைந்திருக்கும் உன் இதயம்
உருகும் படி..

பிடிக்கும்.. உன்னை மட்டும் !


பல மணி நேர பேச்சிற்கிடையே
உன் சில நொடி மௌனம்..

ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும்
என் கைப்பிடித்து
உன் கண்கள் சொல்லும் பாஷை..

சுற்றி ஏதேதோ நடக்க
என் உலகத்தில் நீயும் நானும் மட்டும்..

ம்ம்ம்ம்..
வாழ்க்கையின் நெடுந்தூர பயணத்தில்,
உன்னோடு நடந்து வந்த பாதையில் மட்டும்,
பசுமைக்கு பஞ்சம் இல்லை...

என்னவனே !


என்னில் பாதி நீ என்றேன்..
நீயோ
மெல்ல அனைத்து மெதுவாய் சொல்கிறாய்,
என்னுள் முழுதாய் உனையே சுமக்கிறேன் என்று..

காத்திருக்கிறேன் !


நீயாய் நெருங்கி வந்தாய்..

நீயே விலகிச் சென்றாய்..

அலையாய் நீ இருக்க

கரையோடு காதல் எழுதி காத்திருக்கிறேன்..

நம் பிரிவை பொய்யாக்கத் துடித்து...


என்னவனே எங்கிருகிறாய்...



என்னவனே எங்கிருகிறாய்...
கடல் தாண்டும் தூரத்திலா
இல்லை கைக்கெட்டும் தூரத்திலா..

கேட்கும் பெயர்களையெல்லாம்
என் பெயரோடு இணைத்து
சொல்லி பார்க்கிறேன்..
அது உன் பெயராய் இருக்குமோ என்று
எண்ணியபடி..

முட்களை ரகசியமாய் கேட்கிறேன்
உன் பார்வையின் கூர்மை கூட
இப்படித் தான் இருக்குமோ என்று..

உன் தோல் சாய்ந்தால் எப்படி இருக்கும்
என்று எண்ணிக்கொண்டே - தலை சாய்கிறேன்
வீட்டுச சுவரில்..

தனிமையை தூக்கிலிடுவேன்
நாம் அறிமுகமாகிக் கொள்ளும் போது..

உனக்காக எழுதிய கடிதங்கள்
முகவரி இல்லாமல் தவிக்கிறது..

கனவுகளை கருப்பு வெள்ளை ஆக்குகிறாய்
வெறும் நிழலை மட்டும் கனவில் பதித்து..

என்று உன் நிஜம் காண்பேன்..
என்று உன் கரம் சேர்ப்பேன்..
காத்திருக்கிறேன்..
காத்திருக்கிறேனடா காதலை கையில் ஏந்தி..

நினைவுகள் !



என்ன மாயம் செய்தாயோ..

எதைப் பார்த்தாலும்,

உன் நியாபக மூட்டையில் இருந்து ஒரு துளி,

இதயத்தில் காதலை விதைக்கிறது..


காதலின் முழுமை !


உன் காதல் முழுமை பெறும்...

நிலவவள் உன் கைப்பிடித்து,

மார்பில் புதைந்து அழும்,

அந்த ஒரு நொடியில்...


காதலின் மாயம் !


உலகத்தின் ஈர்ப்பில் சுழலாத இதயம் கூட..
உன் பார்வையில் ஈர்ப்பில் மயங்குகிறது..

எழுத்து கூட வெட்க்கப்பட்டு நெளிகிறது,
உன்னைப் பற்றி எழுதும்போது..

நட்பு என்னும் வர்ணம் பூசினேன்,
நீ மட்டும் அழகாய் தெரிந்தாய்..
காதல் என்னும் வர்ணம் சேர்ந்ததும்
உலகமே அழகாய் மாறிவிட்டது..

'யாரோ' என்று அறிமுகம் ஆனாய்..
ஏதோ ஏதேதோ பேசிச் சென்றாய்..
நம் உறவுக்கு பெயரிட்டாய் 'காதல்' என்று..
பின்வாழ்க்கை இதுவென்று புரிய வைத்தாய்..
இன்று
"என் வாழ்க்கையே நீ தான்" என்று என்னைச்
சொல்ல வைத்தாய்..

மாயம் தான் இந்த காதல் செய்வதெல்லாம்..

Tuesday, November 4, 2008

இறப்பிலும் காதல் சொல்லும் இதயம்!



நெருப்பின் விழும்பில் நிற்கும் போதும்,

என்னை முத்தமிட்டு செல்லும்

உன் நியாபகங்கள்..

ம்ம்ம்ம்..

என் கடைசி மூச்சை கூட - உன்

காற்றோடு கலந்து வைப்பேன்..

என் சாம்பலில் கூட என் காதலை

எழுதச் சொல்லி கட்டளை பிரப்பித்து...

உருவம் தாங்கும் இதயம் எனது !



யாராலும் செதுக்க முடியாது உன் உருவத்தை..
என் இதயத்தில்,
நான் செதுக்கி வைத்திருப்பது போல்
சிறப்பாக...

உன்னால் காதலும் பிடிக்கும்!


பிடிக்காததை கூட பிடிக்கும் என்பாய்
எனக்கு பிடிக்குமே என்று..
என்னவனே..
உன்னை மட்டும் எப்படிச் சொல்வேன்

'பிடிக்காது' என்று..

யாரும் இல்லாத சாலையில் ஒரு கனவு !



யாரும் இல்லாத சாலையைப் பார்த்தால் போதும்...

நாம் கைசேர்த்து நடக்கும் காட்சியை

மறுகணமே திரையிட தயங்காது என் இதயம்..

ஒரு பார்வைக்காக !



உன் முன்னே மட்டும் நகம் கடிப்பேன்..

கூடாதென்று

என்னைத் திட்டி - நீ

பார்க்கும் ஒரு பார்வைக்காக..

காதலின் தவிப்பு!



'ஒரு நிமிடம் பேசாதிரு' என்பேன்..

மறு நொடியே என் இதயம் - என்னைத்

திட்டித் தீர்க்கும்,

உன் குரலுக்காக ஏங்கத் தொடங்கும்..