Monday, June 25, 2007

காதலின் அழகு !


காதலில்,

தள்ளி நின்று சிரிப்பதை விட

தோளில் சாய்ந்து அழுவதே அழகு !!


கல் மழையில் கூட நனைய தயார்..

உன்னோடு கைசேத்து நனையும் போது

கல் மழையும் காதல் மழை தான் !!


கோபத்தில்,

புயலென வெளிவரும் வார்த்தைகள் கூட

வெறும் காற்றாய் எனைச் சேர்கிறது..

உன் கோபத்தில் கூட காதல் இருப்பதினால்..


உன்னால் திருத்தப்படுவேன் என்றால்

பிழையாய் மாறக்கூட தயார்..


உயிர் உருகி நீ பார்க்கும் பார்வைகள்..

என்னவனே !

மரணத்தின் மடியில் இருக்கும்போதும்

என் கடைசி மூச்சு,

உனை சேரவே விரும்பும் !


எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்!

என்றிருந்து உனை மட்டுமே சிந்திக்கத் தொடங்கினேன் !

விடை காண முடியாத கேள்விகள் இவை..


உணர்கிறேன் !

பார்வைகளை பரிமாரிக் கொள்வதை விட

உணர்வுகளை பரிமாரிக் கொள்வதே காதலில் அழகு !


Sunday, June 24, 2007

சோகத்தில் ஒரு புன்னகை !


காட்சிகளாய் சேர்த்து வைத்த உன் நினைவுகள்


என் இதயத்திறையில் - மட்டுமே


திரையிடப்படுகிறது தினம் தினம்...


என் சோகத்திற்க்கு மருந்தாக அல்ல..


உன் புன்னகைக்கு விருந்தாக ! !

Saturday, June 23, 2007

கண்ணீருடன் ஒரு போராட்டம்

கண்ணீரும் கரைய மறுக்கிறது..

கருவிழிக்குள் புதைத்து வைத்த உன் காட்சிகள்

கறைந்து விடுமோ என்று !

பிரிவு !

அசையாப் பொருள்களுக்கு நடுவே

அசைக்க மறந்தன என் இமைகள்...

உன் நினைவுகளை மட்டுமே

அசை போட்டுக் கொண்டிருப்பதினால் !

*********************************************

கல் நெஞ்சில் கூட கண்ணீர் கசிகிறது

உன் நினைவுகளின் பாரம் தாங்காமல்..

**********************************************

வலி தாங்கும் இதயம் தான்..

எனினும் பிரிவை தாங்க மறுக்கிறது

என் இதயம் !

**********************************************

Monday, June 11, 2007

உயிர் உள்ள கவிதை!!


வாழ்கிறேன் என் கவிதைகளோடு மட்டும்..

அதன் வரிகளில் ஒளிந்திருப்பது நீ என்பதால்!

Friday, May 25, 2007

உன்னோடு மட்டும் !


உன் ஆயுள் ரேகைக்குள் என்னை ஒளித்துக்கொள்கிறேன்..

என் ஆயுள் முழுக்க உன்னுடன் வாழ்ந்து விடும் ஆசையோடு! ! !