
காதலில்,
தள்ளி நின்று சிரிப்பதை விட
தோளில் சாய்ந்து அழுவதே அழகு !!
கல் மழையில் கூட நனைய தயார்..
உன்னோடு கைசேத்து நனையும் போது
கல் மழையும் காதல் மழை தான் !!
கோபத்தில்,
புயலென வெளிவரும் வார்த்தைகள் கூட
வெறும் காற்றாய் எனைச் சேர்கிறது..
உன் கோபத்தில் கூட காதல் இருப்பதினால்..
உன்னால் திருத்தப்படுவேன் என்றால்
பிழையாய் மாறக்கூட தயார்..
உயிர் உருகி நீ பார்க்கும் பார்வைகள்..
என்னவனே !
மரணத்தின் மடியில் இருக்கும்போதும்
என் கடைசி மூச்சு,
உனை சேரவே விரும்பும் !
எந்த நொடி நீ என்னுள் நுழைந்தாய்!
என்றிருந்து உனை மட்டுமே சிந்திக்கத் தொடங்கினேன் !
விடை காண முடியாத கேள்விகள் இவை..
உணர்கிறேன் !
பார்வைகளை பரிமாரிக் கொள்வதை விட
உணர்வுகளை பரிமாரிக் கொள்வதே காதலில் அழகு !
6 comments:
நம் புதுவை மண்ணை சேர்ந்த ஒரு கவிஞரின் எழுத்துக்களை வாசிக்க கிடைத்தது மகிழ்ச்சி. நல்ல கவிதை
உங்களை எட்டு ஆட்டத்திற்கு அழைத்திருக்கிறேன். இதை சொடுக்கி பார்க்கவும்
http://premkumarpec.blogspot.com/2007/06/8-1.html
மொத்தத்தில உங்க கவிதை தான் அழகு
//கோபத்தில்,
புயலென வெளிவரும் வார்த்தைகள் கூட
வெறும் காற்றாய் எனைச் சேர்கிறது..
உன் கோபத்தில் கூட காதல் இருப்பதினால்..//
மிகவும் பிடித்து இந்த வரிகள்.. நல்ல கவிதை
தினேஷ்
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Projetores, I hope you enjoy. The address is http://projetor-brasil.blogspot.com. A hug.
Post a Comment