Saturday, June 23, 2007

பிரிவு !

அசையாப் பொருள்களுக்கு நடுவே

அசைக்க மறந்தன என் இமைகள்...

உன் நினைவுகளை மட்டுமே

அசை போட்டுக் கொண்டிருப்பதினால் !

*********************************************

கல் நெஞ்சில் கூட கண்ணீர் கசிகிறது

உன் நினைவுகளின் பாரம் தாங்காமல்..

**********************************************

வலி தாங்கும் இதயம் தான்..

எனினும் பிரிவை தாங்க மறுக்கிறது

என் இதயம் !

**********************************************

2 comments:

தயா said...

வரிகளில் பிரிவின் சோகம் படிக்கிறவர்களால் கூட உணர முடிகிறது

தினேஷ் said...

மறைக்க முடியாத சோகங்களுக்கு மறக்கமுடியாத கவிதை…

தினேஷ்